×

சென்னையில் திருமணமாகாத செவிலியர் தனக்கு தானே பிரசவம் பார்த்த சம்பவம்: கொலை வழக்காக மாற்றம்

சென்னை: சென்னையில் திருமணமாகாத செவிலியர் தனக்கு தானே பிரசவம் பார்த்த சம்பவம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்து(24)(பெயர் மாற்றப்பட்டுள்ளது. நர்ஸான இவர், சென்னை தி.நகர் சவுத் போக் சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். அவருக்கு சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பொறியாளர் செல்வமணி(29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் நர்ஸ் கர்ப்பமானார். இதுகுறித்து இந்து தனது பெற்றோருக்கு தெரிவிக்காமல் மறைத்து சொந்த ஊருக்கு செல்லாமல் சென்னையிலேயே இருந்துள்ளார்.

இதற்கிடையே 7 மாத கர்ப்பமான இந்துக்கு திடீரென நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்டது.அவர் நர்ஸ் என்பதால், பெற்றோருக்கு தெரியாமல் தனக்கு தானே பிரசவம் பார்க்கும் வகையில் வெளியே வந்த குழந்தையின் கை மற்றும் கால்களை பிடித்து இழுத்துள்ளார். இதில் குழந்தையின் கை மற்றும் கால்கள் கிழிந்து தனியாக வந்துள்ளது. அதில் குழந்தை இறந்து பிறந்தது. அதேநேரம், வலியை பொருப்படுத்தாமல் இந்து கிழிந்த குழந்தையின் கை மற்றும் கால்களை கழிவறையில் வீசியுள்ளார். பிறகு தன்னுடன் வேலை செய்த நர்ஸ்கள் வந்து பார்த்த போது, சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். உடனே அவர்கள் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் உதவியுடன் எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

உரிய நேரத்தில் மருத்துவம் பார்த்ததால் அவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். இது குறித்து எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் படி, நர்ஸ் இந்து மீது மாம்பலம் போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.அவரது காதலன் செல்வமணியிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், போலீசார் செவிலியர் இந்துவிடம் நடத்திய விசாரணையில் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து செவிலியர் மீது கொலை வழக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டது. போலீஸ் விசாரணை, மருத்துவத்துறை அறிக்கையில் குழந்தை கொல்லப்பட்டது தெரியவந்ததால் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. குழந்தையை கத்தியால் வெட்டி எடுக்கும் போது செவிலியருக்கு காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து செவிலியர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு கைது செய்யப்படுவார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் திருமணமாகாத செவிலியர் தனக்கு தானே பிரசவம் பார்த்த சம்பவம்: கொலை வழக்காக மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Indu ,Kanyakumari district ,T. Nagar South Pok Road, Chennai ,
× RELATED தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை...